என்றேனும் ஒரு நாள்
நீ என்னை நோக்கி
கண்களால் காதலை
வெளிப்படுத்துவாய் என
மழைக்கான பிராத்தனைக்கு
குடையுடன் செல்லும்
சிறுவனைப் போல
தன் தலைக்கு மேலே
தென்படும் நீர் குடித்த
கருமேகங்கள் மழையாக
பொழியாதா என
தவிப்புடன் காத்திருக்கும்
விவசாயி போல
சாலையில் தனியே
தனது ஜோடியை
இழந்து கிடக்கும்
ஒற்றை செருப்பு போல
சற்றுமுன் மடிந்த
காதல் கணவன்
ஒருமுறை கண் திறக்க
வேண்டும் மனைவி போல
ஏங்கும் எனது
ஒருதலை காதல்....
No comments:
Post a Comment