Saturday, November 29, 2025

ஓருதலை ராகம்







என்றேனும் ஒரு நாள் 

நீ என்னை நோக்கி

கண்களால் காதலை 

வெளிப்படுத்துவாய் என

மழைக்கான பிராத்தனைக்கு

குடையுடன் செல்லும்

சிறுவனைப் போல

தன் தலைக்கு மேலே 

தென்படும் நீர் குடித்த  

கருமேகங்கள் மழையாக 

பொழியாதா என

தவிப்புடன் காத்திருக்கும்

விவசாயி போல

சாலையில் தனியே 

தனது ஜோடியை 

இழந்து கிடக்கும்

ஒற்றை செருப்பு போல

சற்றுமுன் மடிந்த

காதல் கணவன்

ஒருமுறை கண் திறக்க 

வேண்டும் மனைவி போல

ஏங்கும் எனது 

ஒருதலை காதல்....



No comments:

Post a Comment