Wednesday, February 24, 2021

கலையும் பொழுது...

காற்றில் கலைந்து 

வடிவமிழந்த மணல்கோடுகள் 

கனவுகள்...!


நதிநீரை உப்பாய் 

மாற்றும் சமுத்திரமாய்

வாழ்க்கை...!


தன் இனத்தையே

தின்னும் பாம்புகளாய்

நினைவுகள்...!


தன் பலம் மறந்து

பிச்சை எடுக்கும்

யானையாய் 

இலட்சியங்கள்...!


சூரிய ஒளியின்

ஸ்பரிசத்தில்

கரைந்து போகும் 

பனித்துளியாய்

ஆசைகள்...!


இத்தனைக்கும் மத்தியில்

கடந்து செல்லும் தென்றலாய்

புதிதாய் பூத்த பூவாய்

எழுந்து மடியும் அலையாய்

ரத்தம் நாளம் அறுபட்டு

உடலிலிருந்து 

வெளியேறத் துடிக்கும் உயிராய்

கழிகிறது பொழுது

குறிக்கோளின்றி...!