Tuesday, January 24, 2017

ஜல்லிக்கட்டும் தேசிய கீதமும் - 22/01/2016


சனிக்கிழமை (22/01/2016) மதியம் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தேன்.
ராமாபுரம் சிக்னல் தாண்டி டி.எல்.எஃப் அருகே போராட்டக்குழு குழுமியிருந்தது. வளாகத்தின் பிரதான வாயிலில் வாகனங்கள் வரும் வழியில் பாதியை மறைத்து போராட்டக்குழுவினர் அறவழியில் கோசங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர். வளாகத்திலிருந்து வெளியே வரும் வாகனங்களுக்காக சாலை வாகனங்கள் ஒருபுறம் நிறுத்தப்பட்டன. இந்த இடைவெளியில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் என்னை அணுகி போராட்டம் குறித்த எனது பதிவை கேட்டார்.
''சார்...இந்த போராட்டம் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?''
''நான் போராட்டத்தை ஆதிரிக்கிறேன்...போராட்டக்குழுவோடு இணைந்திருக்கிறேன்...எங்கள் பாரம்பரியத்தை காப்பது எங்கள் கடமை''
''இவர்கள் கோஷம் போடும் போது பிரதமரையும் முதல்வரையும் கடுமையாக விமர்சிக்கிறார்களே அது தவறல்லவா?''
''எதனால் அதை தவறு என்கிறீர்கள்?''
''இல்ல சார்....இத செஞ்சது காங்கிரசு ஆட்சி...அதுக்கு மோடி என்ன செய்வாரு?''
''காங்கிரசு செஞ்சது அவ்வளவும் தப்பு...நாங்க வந்தா அம்புட்டையும் தூக்கி நட்டமா நிறுத்துவோம்னு தானே அவரு சொன்னாரு...இப்போவும் நாங்க அதைத்தான் சொல்றோம்...அவர்கள் செய்தது தவறு...நீங்கள் அதை சரி செய்யுங்கள் என்று தான் சொல்கிறோம்.''
''தேசியக்கொடியை தலைகீழாக பிடிப்போம்...அரைக்கம்பத்தில் பறக்க விடுவோம்னு சொல்றாங்களே...இதெல்லாம் தப்பில்லையா சார்''
''தேசியக்கொடி ஒரு அடையாளம்...முதலில் இந்தியா ஒரு தேசமல்ல...அது பல்வேறு தேசங்களை உள்ளடக்கிய ஒரு நாடு...அனைத்து தேசங்களின் தனித்தன்மையையும் பண்பாட்டையும் காக்கும் வரைக்கும் தான் இந்த அடையாளம் செல்லுபடியாகும்...!''
''இந்தியா ஒரு தேசமில்லையா...எப்படி சார்...தேசியகீதம்னு சொல்றோமே''
''அது வடமொழிங்க....தமிழர்களாகிய நாங்கள் ''நாட்டுப்பண்'' என்று தான் சொல்வோமே ஒழிய தேசியகீதம்னு அதை சொல்லமாட்டோம்''
செய்தியாளர் ஒலிவாங்கியை பிடுங்கிக் கொண்டு மின்னலாய் மறைந்தார்.

No comments:

Post a Comment