விசும்பு அதிர முளைத்த தாரை
சிறுகை நீட்டி தூமலர்பாதம் பதிய
மழலைச் சொல் பேசி- விளிக்கும்
கண்ணொளி கண்டு மொட்டுநாசி தொட்டு
மென்பட்டு மெய்தடவி கேசம் வருடி
பல்லில்வாய் நகைகண்டு மயங்கிய வேளை
தெய்வம் உண்டெனக் கண்டேன்!
நுண்புல் தாங்கிய பனித்துளி - செறிந்த
அடவி சுரந்த நன்னீர் புனல்
பாழ்பாலை கண்ட பெருமழை
ஆவின் பால்சுவை நறுவீ மணமென
செப்பிடினும் உன்தீண்டல் ஈடோ
வற்றாத செல்வம் பொதிந்த மெய்வளம்
திரள்மிகு நிறைகேள்வி பெற்றாங்கே
விளையும் மகிழ்ச்சி பெறுகி - நெடுநாள்
இசைபெற வாழ மகிழ்ந்தே வாழ்த்தும்
வானும் மண்ணும் தமிழும் - உன்
அன்னையும் நானும் இயைந்து.
No comments:
Post a Comment