Saturday, August 11, 2018

மெல்ல நடக்கும் நதி (பாங்காக் சுவர்ணபூமி விமான நிலையத்திலிருந்து)

நதிக்கரை அருகே
கவிதை தருவாய்
என்று காத்திருக்க
வந்ததும் வராததுமாய்
வரிகளின் முதல்ச்சீரை
மேலிருந்து கீழாக
எழுதி மறைந்தாய்

இதுவரை அகப்படவில்லை
மறுசீர் எதுவும்...
தெள்ளிய நதிநீர் மீது
புறாவின் சிறகும்
ஒற்றைச்செண்பகப்பூவும்
இரண்டையும் மனம் தொடர
சொற்களும் பின் தொடர்கின்றன

மதியற்ற நானும்
என் முன்னே
விதி போன்று நதியும்
பிரளயத்திற்காக காத்திருக்கும்
பிரபஞ்சமா என் மனம்?

(11-08-2018 அன்று தாய்லாந்தின் பாங்காக் சுவர்ணபூமி விமான நிலையத்திலிருந்து)


No comments:

Post a Comment