Tuesday, May 31, 2016

கலவியும் கவிதையும் (4) - (பெரியதாக ஒரு சிறுகதை)

கலவியும் கவிதையும் (4) - (பெரியதாக ஒரு சிறுகதை)
எது ஒன்று அழகாக இருக்கிறதோ அதன் மீது காதல் வயப்படுவதோ அல்லது காமவயப்படுவதோ இயல்பு என்றே கருதுகிறேன். எது அழகு என்பதற்கான வரையறை தனிநபர் உளவியல் சார்ந்தது.
கவிஞர் தன் பகுதி உடலை மறைத்தபடி என்னருகே வந்து காதோரம் ரகசிய தொனியில் ''போய் குளிச்சிட்டு வர்றீயா?''
பாதி மயக்கத்தில் இருந்த நான் தள்ளாடியபடியே குளியலறையை நோக்கி நடந்தேன்.
ஹோட்டலின் குளியலறை பிரம்மாண்டமானது. ஷவரில் வெதுவெதுப்பாக மிதமான வேகத்தில் பாய்ந்து வந்த வெண்ணீர் குளிக்கும் அனுபவத்தை மேன்மையுற செய்தது. இந்த தருணத்தில் குளியலறை திறக்கப்படும் ஓசை கேட்டு திரும்பினேன்.
கவிஞர் சுடிதாரின் மேலாடையை மட்டும் அணிந்தபடி என்னை நோக்கி வந்தார்
''ஷவரை கொஞ்சம் க்ளோஸ் பண்ணு''
சொன்னபடி செய்தேன். அருகில் வந்து என் காதோரம் அவரது தேவையைக் கிசுகிசுத்தார்.
''நான் எப்பவுமே அப்படிதான் குளிப்பேன்'' என்றேன்.
''இல்ல...எங்காளுகன்னா அந்த பிரச்சினை இல்ல...அதுனாலதான்...நீ தப்பா எடுத்துக்காத..''
''புரிந்தது...நோ பிராப்ளம்...நீங்க போங்க...நான் ஒரு அஞ்சு நிமிஷத்துல வந்துடுறேன்''
''வந்து....?''
''வந்து என்ன....?''
'இல்லை...இன்னொரு கவிதை எழுதலாமான்னு கேட்டேன்''
''ஏங்க...பேப்பரும் பேனாவும் இருந்தா நம்ம பாட்டுக்கு எழுதிக்கிட்டே இருக்கிறதா என்ன...இருந்தாலும் இங்கே எல்லாமே உங்க இஷ்டம்''
''சீக்கிரம் வந்துடு...எத்தனை மணிக்கு ஃப்ளைட்....மிட்நைட் 2.45 தானே?''
''ஆமா....நிறைய நேரம் இருக்கு...கவலைப் படாதீங்க...நாம கவிதையில்ல...காவியமே இயற்றலாம்...''
''ச்சீ...லூசு...'' முதல்முறையாக வெட்கப்பட்டார். அந்த வெட்கத்தில் துளியும் போலித்தனமில்லை.
திரும்பி நடந்த போது அவரோடு சேர்ந்து திரும்பிய சுடிதாரின் மேலாடை விலக்கத்தில் கருமேகத்தை கிழிக்கும் மின்னலென தெரிந்தது சிவந்த தொடைகள். குளியலறையிலிருந்து வெளிவந்த போது கவிஞர் கட்டிலில் இரண்டு தலையணைகளை ஒன்றன்மீது ஒன்றாக வைத்து அதன் மீது வலது கையால் தன் தலையை தாங்கியபடி காத்திருந்தார். ஈரமான துண்டை கழட்டாமல் கட்டிலில் அமர்ந்து ஒரு நிமிடம் என் பார்வையை கவிஞரின் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை ஓடவிட்டேன். சுடிதாரின் பிளவுகளில் தென்பட்ட சிவந்த தொடையில் ஒரு மச்சம் கவனத்தை ஈர்த்தது. வலதுகை ஆட்காட்டி விரலால் தொட்டேன்...
''அதிர்ஷ்ட மச்சமா இது?''
''அதிர்ஷ்டம் இல்ல அடிவாங்கிக் கொடுத்த மச்சம்''
''அடியா...யார் அடிச்சா...மச்சத்திற்கும் அடிக்கும் என்ன சம்பந்தம்?''
''அது வேணாமே....இப்போ எதுக்கு அந்த சோகக்கதை?''
''இல்ல...எனக்கு இப்போ தெரிஞ்சாகணும்''
''ஒரு நாள் என் ஹஸ்பெண்டிடம் இது எனக்கு அதிர்ஷடமான மச்சம் என்று சொல்ல அவர் ''நீ ஒரு தரித்திரம்...உனக்கென்னடி அதிர்ஷடம் வேண்டிக்கிடக்குன்னு பளார்னு அறைஞ்சுட்டாரு...நான் கவிதை / கதை எழுதுறதுனால அவருக்கு ஒருவிதமான காம்ப்ளெக்ஸ்...ஆமா...நீ உன் வைஃபை அடிப்பியா?''
''இல்லை...ஒருபோதும் இல்லை...என்னைவிட வலிமை குறைந்தவர்களை நான் ஒருபோதும் தாக்குவதில்லை''
''உனக்கு இந்த மச்சத்தை பார்த்தா என்ன தோணுது?''
''அதிர்ஷடம் என்றதும் உன் மச்சம் ஞாபகம்...அழகு என்றதும் உன் மொத்தம் ஞாபகம்..அப்படிங்கற பாட்டு வரி தான் ஞாபகத்திற்கு வருது'
''என்ன பாட்டு அது''?
பழனிபாரதி எழுதுனது...படம் பெயர் நினைவில்லை...கார்த்திக் முழுக்கை சட்டை போட்டிருப்பார்...ரோஜா தொப்புளை மறைத்து சேலை கட்டியிருப்பார்...ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்...அப்படின்னு துவங்கும்...நல்ல மெலோடி...எனக்கு ரொம்பப் பிடிக்கும்''
''வேறென்ன ஞாபகம் வருது?''
''செந்தழலின் ஒளி எடுத்து
சந்தனத்தில் குளிர் கொடுத்து
பொன் தகட்டில் வார்த்து வைத்த
பெண் உடலை என்னெவென்பேன்
மடல்வாழை தொடை இருக்க
மச்சம் ஒன்று அதிலிருக்க
படைத்தவனின் திறமை எல்லாம்
முழுமை பெற்ற அழகி என்பேன்''
பாடலின் கடைசி வரியை உச்சரித்து முடிக்கும் முன்பே கவிஞர் உதட்டருகே நெருங்கி இருந்தார்.
நெற்றியும் மூக்கின் நுனியும் சந்தித்துக் கொண்டிருந்த வேளையில் இருவரது மூச்சுக்காற்றும் கூடி முயங்கிக் கொண்டிருந்தன.
மீண்டும் ஒரு கவிதையை கவிஞர் மிக நுட்பமாக வடித்துக் காட்டினார்.
மிகச்சரியாக இரவு பத்துமணிக்கு விமான நிலையம் வந்தடைந்தோம்.
''எங்கே உன்னோட போர்டிங் பாசை காட்டு''
''ஏன்...சீட் நம்பர் தெரியணுமா....41கே''
''எப்படிடா இது....என்னோட நம்பர் 41ஜே...நம்பவே முடியலேல்ல''
''இது நமது வாழ்க்கையின் இந்த கணத்து தேர்வு...அவ்வளவுதான்''
''பொத்துறியா...ஓரேடியா தொறக்கிற...சீட் பக்கத்து பக்கதுல அமைஞ்சதுக்கு இவ்வளவு பெரிய தத்துவமா?''
''சரி வாங்க...நம்ம முதல்ல சாப்பிட போவோம்....இங்க டேஸ்ட் ஆஃப் இந்தியான்னு ஒரு ரெஸ்டாரண்ட் இருக்கு...நல்லா இருக்கும்''
நாங்கள் நின்று கொண்டிருந்த இம்மிக்ரேசன் கவுண்டருக்கு அருகிலேயே இருந்தது அந்த உணவகம். அன்றைய சிறப்பு மட்டன் பிரியாணி.
வயிறாற உணவருந்தி விமானத்தில் அருகருகே அமர்ந்தோம்.
தமிழில் இருப்பதிலேயே மோசமான திரைப்படங்கள் குறுந்தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்தன. எங்களை சுமந்து கொண்டு அந்த அலுமினியப் பறவை ஆகாயத்தில் பறந்த போது கவிஞர் காதுகளை பாடல் கேட்பதற்காக தயார் படுத்தியிருந்தார். அவரது  மொபைல் போனிலிருந்து பாடல்கள் காதுகளுக்குள் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தன. கண்களால் எனக்கும் வேண்டுமா எனக்கேட்டார். சரி கேட்போமே என்று ஒரு இயர்போனை எனது காதுகளுக்குள் பொருத்தினேன்.
இளையராஜாவின் இசை காது வழியாக நேராக இதயத்தில் பாய்ந்தது. ஜென்சி தனது காந்தக்குரலால் ஈர்த்தார்.
''ஆயிரம் மலர்களே மலருங்கள்...அமுதகீதம் பாடுங்கள் ஆடுங்கள்...காதல் தேவன் காவியம்...நீங்களோ நாங்களோ...நெருங்கிவந்து சொல்லுங்கள் சொல்லுங்கள்...ஆயிரம் மலர்களே மலருங்கள்..''
காந்தத்தின் இரு துருவங்களுக்கு இடையே சிக்கிய இரும்புத்துகள்கள் போல ஜென்சி தனது குரலால் எங்கள் இதயங்களை கட்டிப்போட்டார்.
திடீரென்று பாடலை கவிஞர் நிறுத்தினார்.
''ஆமா...சினிமா பாட்டுக்கு வார்த்தை மாத்தி போட்டு பாடுவேன்னு சொன்னியே...இந்த பாட்டுக்கு ஒரு மாத்துப்பாட்டு எழுது பார்க்கலாம்''
இந்த தாக்குதலை நான் எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் விமானத்தின் உள்ளே பாட ஆரம்பித்தேன்.
''ஆயிரம் டவுசரு கிழிஞ்சது....அதுல ஒண்ணு என்னுது...நல்லது....கிழிஞ்சு போன டவுசரு...புதுசுதான் தைச்சது டெய்லர் கடையில் உள்ளது...உள்ளது''
வழக்கம் போல வெடித்து சிரிக்க தயாரானார் கவிஞர். இந்தமுறை நான் அனுமதிக்கவில்லை. வாயைப் பொத்தினேன். ஆனால் கைகளால் அல்ல. இமைகள் பட்டாம்பூச்சியின் சிறகுகள் போன்று சிறகடித்தன. இருபது வினாடிகளுக்கு பின் அவர் விடுதலை பெற்றார். அவர் மெல்லும் சூயிங்கம் பெயரை விமானம் சென்னையில் இறங்குவதற்கு முன்பாக கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும் என நினைத்துக் கொண்டேன்.
''ப்பிசாசு...இப்படியா பண்ணுவ''
''எல்லோரும் தூங்க ஆரம்பிச்சாச்சு...இப்போ போயி அவங்கள எழுப்பிவிடணுமா?''
''ஆமா...உங்க வீட்டுக்காரரு அடிப்பாரு சொன்னீங்களே என்னென்ன காரணத்துக்கு அடிப்பாரு?''
''அதை ஏன் கேக்குற....காரணமே இல்லாம அடிப்பாரு...ஒருநாள் ரசம் ஏன் தண்ணியா இருக்குண்ணு அறைஞ்சாரு''
''அப்போ எப்படி ரியாக்ட் பண்ணுவீங்க?''
''அப்போதைக்கு ஒண்ணும் செய்ய முடியாது...ஆனா நான் அவரை வேற மாதிரி பழிதீர்த்துக்குவேன்...நேத்து ராத்திரி நடந்தது அவரை பழிவாங்க நான் மேற்கொண்ட ஒரு நடவடிக்கை...ஒனக்கு இது புரியாது...''
விமானம் தரையிறங்கிய போது சென்னையில் மணி காலை 8.15
இமிக்ரேசனில் பெரிய கூட்டம். கவிஞர் நேராக வெளிநாட்டு தூதர்களுக்கான சிறப்பு கவுண்டரை நோக்கி என்னையும் இழுத்துக் கொண்டு நடந்தார். மிக எளிதாக வெளியேறினோம். கீழே சுங்க அதிகாரிகளின் சோதனையையும் மிக எளிதாக கடந்து வெளியே வந்தோம். நான் ஃபாஸ்ட் ட்ராக் டாக்சியில் முன்பதிவு செய்து பில்லை எடுத்துக் கொண்டு வரும்வரை கவிஞர் காத்திருந்து என்னோடே வெளியே வந்தார்.
நான் எப்படி விடைபெறுவது என்ற குழப்பத்தில் இருந்தேன்.
''சரி...எல்லாத்தையும் மறந்துட்டு உன் வேலையை பாரு...புரிஞ்சதா?''
திடீரென எங்கேயிருந்தோ சிவப்பு விளக்கு சுழல ஒரு அரசு வாகனம் வர அதில் ஏறி மின்னெலென மறைந்தார்.
எனக்கு வியர்த்தது. இவர் யார்...இவர் அவர் இல்லையா...அவர்தான் இவர்...எனக்கு நன்றாகத் தெரியும்...அதே முகம்...அதே உதடு...அதே பல்வரிசை...வலக்கை மணிக்கட்டில் மச்சம்...பெரிய பாதம்...நீண்ட விரல்கள்...அதே கொச்சையான ஆங்கிலம்...அவர்தான் இவர்....இவருக்கும் அரசுக்கும் என்ன சம்பந்தம்...இவர் யார்...அன்று புத்தக அறிமுகவிழாவில் சந்தித்த நபர் யார்...ஐயோ இது என்ன புதுவிதமான விபரீதம்?''
இத்தனை குழப்பத்திற்கிடையே டிரைவர் எனது பைகளை காருக்குள் திணித்து வண்டியை போரூரை நோக்கி செலுத்தத் தொடங்கியிருந்தார் மனம் தொடர்ந்து கலவரத்திலும் குழப்பத்திலும் ஆழ்ந்து கொண்டிருக்க எனது நாசி பல்வேறு மணங்களை உணரத் தொடங்கியிருந்தது.
கார் நந்தம்பாக்கம் வந்தபோது போக்குவரத்து நெரிசல் அதிகமாகி அது சீராக நெடுநேரம் பிடிக்கும் என்று கருதிய டிரைவர் '' சார்...ஐ.டி.பி.எல் காலணி வழியா குறுக்கே போயி ஈவிகேஎஸ். இளங்கோவன் வீடு வழியா போய்டலாம் சார்'' என்றார்.
'''எப்படியாவது போங்க சார்'' என்றேன் சுரத்தே இல்லாமல்.
அங்கேயும் எங்களைப் போன்றே ஒத்தசிந்தனை கொண்டோரால் போக்குவரத்து நெரிசல்.
வெறித்து வானத்தைப் பார்த்தேன். மேகம் இல்லாத வானம் எனக்கு உவப்பைத் தரவில்லை. பக்கவாட்டில் பார்வையை செலுத்தினேன்.
பெரிய மரங்களால் சூழப்பட்ட அந்த பிராந்தியத்தில் காலை வெப்பம் குறைவாக இருந்தது.
ஒரு அணில் மரத்திலிருந்து இறங்கி வந்து கீழே விழுந்து கிடந்த பழக்கொட்டையை எடுக்க விரைந்து வந்தது. எதிர்பாராமல் எங்கேயிருந்தோ வந்த வெருகுப் பூனை அந்த அணிலை கவ்விக் கொண்டு காருக்கு பின்திசையில் சென்றது. அதிர்ந்து போய் கார்க்கதவு வழியே எட்டிப்பார்க்க இயன்ற அளவு கழுத்தைத் திருப்பினேன். என் பார்வை பூனையை நோக்கியும் கார் அதற்கு எதிர்த்திசையிலும் விரைந்தன.




No comments:

Post a Comment