2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 நான் பாங்காகிலிருந்து சென்னை வந்த விமானத்தின் தலைமை பணிப்பெண்ணின் பெயர் ''விலையில்ரத்னா". வயது தோராயமாக 50 இருக்கலாம். இவருக்காவது அவர் பெயரின் பொருள் தெரியுமா என ஆர்வ உந்துதலால் அவரிடமே வினவினேன். மிகத் தெளிவாக ''விலைமதிக்க முடியாத அரிய வகை பொக்கிஷம்'' என்றார். இது தமிழ்ப்பெயர் தெரியுமா உங்களுக்கு என்றேன். பொறுமையாக சொன்னார். ''இந்த பிராந்தியத்தில் தமிழையும் எங்களையும் பிரிக்க முடியாது. பெரும்பாலான ஊர்ப்பெயர்கள், பொருட்பெயர்கள் தமிழில் உள்ளன. நாங்கள் தமிழ் பேச முடியாதவர்கள். ஆனால் எங்களையும் மீறி தமிழ் எங்களோடு சேர்ந்து பயணிக்கிறது'' என்றார். நண்பர் ஒரிசா பாலு தமிழ் மொழியின் தாக்கம் தமிழர்களின் கடல்பயணங்களின் வாயிலாக சர்வதேச அளவில் எந்த அளவிற்கு பரவியுள்ளது குறித்து விரிந்த ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளார். ஆய்வுக்குரிய பல்வேறு தகவல்களின் களஞ்சியம் அவர். நண்பர்கள் அவரது ஆய்வுக்குறிப்புகளை இணையத்தில் தேடிப் படிக்கலாம்.
No comments:
Post a Comment