Tuesday, April 12, 2016

துபாயிலிருந்து நைரோபிக்கு: பிரேமம்....!


சனிக்கிழமை மாலை துபாயிலிருந்து நைரோபி பயணம். நான் அமர்ந்திருந்த இருக்கையான 40Jக்கு அருகில் 41Kவில் ஒரு பெண்மணி வந்தமர்ந்தார். அமைதியான கேர்ள் டூ நெஃஸ்ட் டோர் என்பார்களே அதைப்போன்று...அவரை கடந்து செல்லும் கேரள தேசத்து நண்பர்கள் மட்டும் அவரைப் பார்த்து புன்னகைத்த வண்ணம் கடந்து சென்று கொண்டிருந்தனர். புகைப்படம் எடுக்கக் கேட்ட போது மிகவும் வெட்கப்பட்டு நாசூக்காக அதை மறுத்தார். பொறுத்துப் பொறுத்து பார்த்த நான் அவரை புன்னகைத்து கடந்து சென்ற ஒரு நண்பரை தடுத்து நிறுத்தி யார் அந்த பெண்மணி என்று வினவினேன். அவர் என்னை வேற்றுகிரக ஜீவராசியை பார்ப்பது போன்று பார்த்தார். ''ஒங்களுக்கு உண்மையிலேயே தெரியாதா?'' என்றார். நான் என் ஒரே மகன் மீது சத்தியம் செய்து தெரியாது என்றேன். நண்பர் என்னை மன்னித்து அந்த வரலாற்று சிறப்புமிக்க தகவலை உதிர்த்தார். அதாகப்பட்டது அந்த பெண்மணி தான் சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி சக்கைப்போடு போட்ட ''பிரேமம்'' திரைப்ப்டத்தின் கதாநாயகியாம்...சாய்பல்லவி என்பது அவரது திருநாமம். என்னுடைய பொதுஅறிவை எண்ணி நானே என்னை நொந்து கொண்டேன்... தாயகம் திரும்பிய உடன் அந்த படத்தை யூடோரண்டில் பதிவிறக்கம் செய்து பார்த்து எனது அறிவை ஒரு அங்குலம் நீட்டித்துக் கொள்ள உறுதி பூண்டுள்ளேன்...! வேறு வழி?

No comments:

Post a Comment