காலையில்
போரூரில் இருக்கும் எனது இல்லத்திலிருந்து கிளம்பி
சாந்தோம் நெடுஞ்சாலையில் இருக்கும் எனது அலுவலகத்திற்கு வந்து
கொண்டிருந்தேன். கிண்டி ரயில் நிலையம்
அருகில் வந்ததும் பெரும் தூறல் விழ
ஆரம்பித்தது. தலைக்கு மேலே புதிதாக
கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் ரயில் பாலம். வண்டியை
ஓரமாக நிறுத்தி மழையாடை அணிந்தேன். பாலம்
ஏறி ஸ்பிக் அலுவலகம் வந்ததும்
மழை இல்லை. வண்டியை நிறுத்திவிட்டு
திரும்பி பார்த்தேன். வானம் கிண்டி ரயில்
நிலையத்தை மட்டும் தனது தூறல்களால்
ஆசீர்வதித்துக் கொண்டிருந்தது....நல்லார் ஒருவர் உளறேல்
அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை!
No comments:
Post a Comment